மும்பை:-
கிரிக்கெட் மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல், மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மஹாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்று சந்தேகம் நிலவிவருகிறது.
இந்நிலையில் மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்து அம்மாநில அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பார்வையாளர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்காமலும், யாரையும் கிரிக்கெட் மைதானத்திற்குள் அனுமதிக்காமலும் மும்பையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மஹாராஷ்ட்ர அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. டிவி, இணையதளம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகளுக்கு இந்த ஏற்பாடு மூலம் கிடைக்கும் வருமானத்தில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.