தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வேலூருக்கு 50 கிலோ மீட்டர் வடமேற்கில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் கடந்த 3ம் தேதி லேசான அளவிற்கு நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தினர். அதேபோல் நேற்று பேரணாம்பட்டு தலைக்காடு எனும் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்நிலையில் வேலூருக்கு 50 கிலோ மீட்டர் வடமேற்கில் உள்ள பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆந்திரா – சித்தூர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினார். ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகியுள்ள நில அதிர்வு, லேசானது என புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.