தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் சனிக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 225 நபர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி செப் . 12 – ஆம் தேதி தமிழகத்தில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன .
நோய்த்தொற்று அதிகம் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
பள்ளி , கல்லூரிகள் திறப்பால் இதுவரை பெருமளவில் நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை .
நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகள் , கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன . அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் நன்றாக உள்ளனர் .
தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத சி 1.2 வகை கொரோனா வைரஸ் உலக அளவில் ஒன்பது நாடுகளில் பரவிய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலை யங்களிலும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் தமிழகம் முதல்வர் மு.கஸ்டாலின்.
சி.திவ்யதர்ஷினி