தமிழகம்

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவெண்ணைநல்லூர்:-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுமியை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.

ALSO READ  கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு - 4 வீடுகள் தரைமட்டம்!

அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்னை, முருகன், கலியபெருமாள்  2 பேரும் சேர்ந்து எனது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக கூறினார். 

சிறுமி ஜெயஸ்ரீ கூறிய வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த பெற்றோர் கதறித் துடித்தனர். இது குறகத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூறுகையில்:-

ALSO READ  வேலூரில் மீண்டும் நில அதிர்வு… மீளா அச்சத்தில் மக்கள்!

எங்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்து வந்தது. அவர்கள் என் மகனை தாக்கினர். அதனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அதுகுறித்து புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றேன்.

அந்த ஆத்திரத்தில்தான் அவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் இப்படி தீ வைத்து என் மகளை எரித்து விட்டனர். அவர்களை சும்மா விடக்கூடாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த முருகன் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவர் ஆவார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுவையில் அதிமுக ஆட்சி வரும்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !

News Editor

ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம்- தெற்கு ரயில்வே…

naveen santhakumar

குட்கா சப்ளை செய்த பார்சல் நிறுவனம் சீல் வைப்பு:

naveen santhakumar