தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழகத்தில் இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்:-
இதுவரை தமிழகத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 2,01,672 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் 8,950 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 1,120 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 412 சோதனை மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குணம் அடைந்துள்ளார்.
339 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளிவந்துள்ளது.
இதில் இன்னும் 70 சோதனை முடிவுகள் வரவில்லை என்றார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.