சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கு திரிபுரா மாநிலத்தை சேர்ந்த குருஸ்டு மய்ஹ வயது 28, பிலால் உசைன் வயது 30, ஹன்வர் உசைன் வயது 22, இமான் உசைன் வயது 30 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் இந்த விற்பனை பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்கு திரிபுராவை சேர்ந்த நான்கு பேர் எப்படி தமிழகத்திற்குள் வந்து தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வருகிறார்கள் இதற்கு மூலையாக உள்ளது யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
இவர்களுடன் போதைப் பொருட்களை விற்கக்கூடிய கும்பலை சேர்ந்தவர்கள் வேறு யார் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர் என்றும் அவர்கள் எங்கு தங்கி இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.