தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உள் கட்டமைப்பு வங்கியான ஏ.ஐ.ஐ.பி. ஒப்புதல் அளித்துள்ளது .
ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார காரணிகளை மேம்படுத்த 2016 முதல் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி நிதி உதவி செய்து வருகிறது . அந்த வகையில் , சென்னையில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை அமையவிருக்கும் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 356.67 மில்லியன் டாலர் அதாவது 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனாக வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது .
சமீபத்தில் சென்னை வந்திருந்த ஏ.ஐ.ஐ.பி. வங்கியின் துணை தலைவர் பாண்டியன் , மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்ததோடு , முதலமைச்சர் , நிதியமைச்சரையும் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது .
சி.திவ்யதர்ஷினி
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.