தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான நடிகை குஷ்புவின் @khushsundar என்ற டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டு, அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது.
குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தையெல்லாம் 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவர் 710 பேரை பின்தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஐடி முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதும் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக டுவிட்டர் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். கடந்த சில நாட்களால் என்னுடைய டுவிட்டர் கணக்கில் பதியப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் 7ந்தேதியும் குஷ்புவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.