தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.
முன்னாள் MLA வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி முதல் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் அவருக்கு திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் காலமானார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.