சென்னை
அ திமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் ஒப்பந்த பணிகளை வாங்கித் தருவதாக கூறி 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.வேலுமணி கடந்த அ திமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் தி மு க சார்பில் தமிழ்நாடு கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதுபோன்று அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் க டந்தவாரம்லஞ்ச ஒழிப்புத்துத்துறையினர் சோதனை சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் இன்று முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சம்பந்தப்பட்ட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய ஊர்களில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துத்துறையினர் சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.