தமிழகம்

புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 78.

Image

தாயார் மறைவு தொடர்பாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்…

என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.

ALSO READ  தமிழகம் அரசு நகர பேருந்துகளில் பயணிக்க ‘தனி டிக்கெட்’..!

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்.என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

மூத்த அரசியல்வாதி குமரி அனந்தன்- கிருஷ்ணகுமாரி தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை; 5 ஆயிரம் மருந்து குப்பிகள் வாங்க உத்தரவு!

News Editor

வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து – மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

naveen santhakumar

குடிமகன்களுக்கு மேலும் ஒரு குஷியான செய்தி..

naveen santhakumar