சென்னை:-
நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வெடி குண்டு வெடிக்க இருப்பதாக மர்ம நபர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் தொலைப்பேசியில் அழைத்தது தெரியவந்தது. இவர் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று, தீவிர சோதனை செய்த போது வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை கடைசியில் இது வெறும் புரளி என்று தெரிந்தது.
ஏற்கனவே ரஜினிகாந்த், மற்றும் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியில் இவையும் வெறும் புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் இதற்கு முன்னரும் பல பிரபலங்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போது ஜாமினில் வெளிவந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.