தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வேலூர்:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சக கைதிகள் மற்றும் சிறை காப்பாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி இதுவரையில் அவர் இதுபோன்ற தற்கொலைக்கு முயன்றது இல்லை.
தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று காவலர்களுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது இதையடுத்து நளினி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.