தமிழகம்

டிக் டாக் மோகம்.. பூனையை தூக்கிலிட்ட இளைஞர்.. சிறையில் அடைத்த போலீஸ்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெல்லை:-

பூனையை தூக்கிலிட்டு டிக் டாக் செய்த இளைஞரை நெல்லை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டிக் டாக் செயலில் நாள்தோறும் பல வித்திரமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. டிக் டாக் இல்லை பைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பலரும் பல  வினோதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் இந்த டிக் டாக் மோகம் பலரையும் சிக்கலில் சிக்க வைக்க தவறுவதில்லை.

ALSO READ  காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, குடும்பத்துடன் சேர்த்து வைத்த டிக் டாக்...

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிக் குளத்தை சேர்ந்த தங்கதுரை. இவர் மாட்டுப் பண்ணை தொழில் செய்து வருகிறார். டிக் டாக் மீது மோகம் கொண்ட இவர் தான் வளர்த்த பூனையை தூக்கிலிட்டு அதை டிக் டாக்காக எடுத்து பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் குவிய தொடங்கியுள்ளது.

இதுகுறித்து நெல்லை மிருகவதை தடுப்புப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் கிடைக்க அவர்கள் தங்கதுரை மீது பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கதுரையை கைது செய்த போலீசார், அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மற்ற ஏடாகூட டிக் டாக் வாசிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

ALSO READ  இ-பதிவு சந்தேகங்களுக்கு இலவச ஹெல்ப் லைன் எண் அறிமுகம் !

அதேசமயம் இதுபோன்ற கொடிய வீடியோக்களுக்கு லைக்ஸ்களை இடும் மக்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தொடங்கி வைத்த முதல்வர் !

naveen santhakumar

தமிழில் அர்ச்சனை….அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்….!!!!

Shobika