நெல்லை:-
பூனையை தூக்கிலிட்டு டிக் டாக் செய்த இளைஞரை நெல்லை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டிக் டாக் செயலில் நாள்தோறும் பல வித்திரமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. டிக் டாக் இல்லை பைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பலரும் பல வினோதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் இந்த டிக் டாக் மோகம் பலரையும் சிக்கலில் சிக்க வைக்க தவறுவதில்லை.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிக் குளத்தை சேர்ந்த தங்கதுரை. இவர் மாட்டுப் பண்ணை தொழில் செய்து வருகிறார். டிக் டாக் மீது மோகம் கொண்ட இவர் தான் வளர்த்த பூனையை தூக்கிலிட்டு அதை டிக் டாக்காக எடுத்து பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் குவிய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நெல்லை மிருகவதை தடுப்புப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் கிடைக்க அவர்கள் தங்கதுரை மீது பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கதுரையை கைது செய்த போலீசார், அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மற்ற ஏடாகூட டிக் டாக் வாசிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
அதேசமயம் இதுபோன்ற கொடிய வீடியோக்களுக்கு லைக்ஸ்களை இடும் மக்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.