சென்னை:-
சாத்தான்குளத்தில் சிறைக் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மனைவி மற்றும் மகளை தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தகவல்.
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு துறை பிரபலங்கள், சினிமா துறையினர், கிரிக்கெட் வீரர்கள் என்று நாடு முழுவதும் இருந்து தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகிறார்கள்.
தென் இந்தியாவின் மிக மூத்த நடிகராக மதிக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக இதுவரையில் கருத்து தெரிவிக்கவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினி உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினருடன் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.