தமிழகம்

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் செப்.15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

அரசின் மீதான பாஜக விமர்சனங்களுக்குச் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம்:  அமைச்சர் கே.என்.நேரு பேட்டி | We will respond to the BJP's criticism of the  government ...

கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

ALSO READ  குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு ரத்து ??? - டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு..!

இதனிடாயே, வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். செப்டம்பர் 15க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

ALSO READ  வீட்டிற்கே காய்கறிகளை கொண்டு வரும் தமிழக அரசு.. ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி????

உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் உள்ள குற்றச்சாட்டுகளை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படும் பணி விரைவுபடுத்தப்படும் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30 வரை நீட்டித்து முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு…

naveen santhakumar

விவசாயிகளுக்கு நகை கடன்கள் தள்ளுபடி-முதல்வர் அறிவிப்பு!

News Editor