உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 9இந்த தொற்றை 3 மணிநேரத்தில் கண்டறியும் வகையில் தமிழகத்தில் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு B 1.1. 529 என்று பெயரிட்டர். இந்நிலையில் இந்த வைரஸுக்கு ஒமைக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகையான வைரஸை மூன்று மணிநேரத்தில் கண்டறியும் வசதிகளைக் கொண்ட 12 அரசு ஆய்வகங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அது ஒமைக்ரான் பாதிப்பா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 12 அரசு ஆய்வாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. Taqpath என்ற கிட் கொண்ட 12 ஆய்வகங்களில் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதில் மரபணு பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.