தமிழகம்

சேலத்தில் காபி பார் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் நாழிக்கல்பட்டி பிரிவு ரோடு பகுதியில்  லோகநாதன் என்பவர் காபி பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு காபி பார் முன்பாக மணிகண்டன் என்பவர் அவரது மனைவியுடன் குடும்ப தகராற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையின் முன்பு தகராறில் ஈடுபட வேண்டாம் என்று கூறியதால் கடை உரிமையாளருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் அங்கிருந்து மணிகண்டன் சென்றுள்ளார்.

ALSO READ  எக்காரணம் கொண்டும் என்னுடைய புத்தகங்களை வாங்கக்கூடாது; இறையன்பு ஐ.ஏ.எஸ் !

பின்னர் இன்று அதிகாலை 4 மணி அளவில்  காபி பாரின் திறந்து உரிமையாளர் லோகநாதன்
சுத்தம் செய்து குப்பையை வெளியே கொட்டுவதற்கு சென்ற போதும், இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பெட்ரோல் குண்டாக மாற்றி தாக்கி விட்டு  தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து மல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தப்பியோடிய மணி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் இருந்துள்ளார்.

ALSO READ  ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு :

பின்னர் தொடர்ந்து பல்வேறு தகராறுகளில் ஈடுபட்டதால் ஏற்கனவே 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் சந்திப்பு……

naveen santhakumar

மக்களிடம் தானமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயயை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த மனிதர் 

naveen santhakumar

பள்ளியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு – 3 மாணவர்கள் படுகாயம் – பள்ளி வளாகத்திற்குள் எப்படி வந்தது?

naveen santhakumar