சேலம் நாழிக்கல்பட்டி பிரிவு ரோடு பகுதியில் லோகநாதன் என்பவர் காபி பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு காபி பார் முன்பாக மணிகண்டன் என்பவர் அவரது மனைவியுடன் குடும்ப தகராற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையின் முன்பு தகராறில் ஈடுபட வேண்டாம் என்று கூறியதால் கடை உரிமையாளருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் அங்கிருந்து மணிகண்டன் சென்றுள்ளார்.
பின்னர் இன்று அதிகாலை 4 மணி அளவில் காபி பாரின் திறந்து உரிமையாளர் லோகநாதன்
சுத்தம் செய்து குப்பையை வெளியே கொட்டுவதற்கு சென்ற போதும், இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பெட்ரோல் குண்டாக மாற்றி தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து மல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தப்பியோடிய மணி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் இருந்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து பல்வேறு தகராறுகளில் ஈடுபட்டதால் ஏற்கனவே 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.