தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கியும் அபராதமும் போடுகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றுகின்றனர்.
அதே போல் கிருஷ்ணகிரி நகர் பகுதியில் பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களிடம் காவல் ஆய்வாளர் ஒருவர் இலவசமாக முக கவசங்களை வழங்கி கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து முக கவசம் அணியுங்கள் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற முகக்கவசம் அணியுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.