நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்ததற்கு அமுமுக பொது செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹெரென் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமுமுக கட்சி தலைவர் தினகரன் இது குறித்து தனது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிபிஐ விரைவாக எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்.
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
#pollachi #pollachicase #tamilthisai #admk #ammk