தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை பெங்களூருவில் இருந்து தமிழகம் கிளம்பினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தனது பயணத்தை தொடங்கி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா.
இந்நிலையில் நாகையிலிருந்து சசிகலாவை வரவேற்க சென்ற அமமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அக்கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நாகையிலிருந்து சசிகலாவை வரவேற்க சென்ற அமமுகவினர் புறப்பட்டு சென்ற நிலையில் தமிழக புதுச்சேரி எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதனையடுத்து சசிகலாவை வரவேற்க தங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாஞ்சூர் சோதனை சாவடி அருகே அமமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.