தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதி மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை என்றும் விரைவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை அன்பில் மகேஷை அக்கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ தலைமையில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.