தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சிவகங்கை:-
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி கார்த்தி சிதம்பரம் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
சிவகங்கை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீப நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது காரைக்குடி இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.