தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
வங்க கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாம்பன் மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி வலைகளை வெட்டி எரித்துள்ளனர்.
படகு சேதமான நிலையில் துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 9 மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்களை இலங்கைப்படை துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.