கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இளம் பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய காசி போன்று மேலும் ஒரு மேடைப் பாடகர் – திருமண ஆசை காட்டி பல இளம் பெண்களின் வாழ்க்கையை சூறையாடியதாகவும் தன்னை கொலை செய்ய முயற்சி என அவரது மனைவியே நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோபிகா . இவர் மேடை பாடகியாக உள்ளார் . இவர் மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசை குழுவைச் சார்ந்த இசைக்கலைஞர் ஸ்டீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இந்த நிலையில் தற்போது இவர் தனது கணவர் பல இளம்பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில் ” தனது கணவர் வயது வித்தியாசம் பாராமல் பல பெண்களிடம் தகாத உறவு வைத்துள்ளார். பல பெண்களைத் திருமண ஆசை காட்டி அவர்களது கற்பை சூறையாடி உள்ளார். பல பெண்களிடம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளார். இதற்கு கணவரின் தாய் , தந்தை உடந்தை என்றும் தெரிவித்துள்ளார் .
மேலும் இதனைத் தட்டிக்கேட்ட என்னை தனது கணவர் ஸ்டீபன் அவரின் தாய் தந்தையுடன் சேர்ந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். எனது கணவர், பல பெண்களின் வாழ்க்கை சூறையாடிய நாகர்கோவிலைச் சேர்ந்த காசியைப் போலச் செயல்படுவதால் காவல்துறை அவரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.