தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
சென்னையில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்தது.
மதுக்கடைகளில் கூட்டம் கூடுவது, ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்குமான இடைவெளி பராமரிக்கப்படுவது, ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது, சமூக இடைவெளி உள்ளிட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்றபற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகம் இருக்கும் காரணத்தால் சென்னையில் மதுபான கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.