விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 30). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 19). இவர்கள் இருவருக்கும் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. நிலையில்,கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவர் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.
கலியபெருமாள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியூருக்கு கட்டிட பணிக்காக சென்ற நிலையில், பிரேமாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் வருடத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர், பிரேமாவின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கலியபெருமாள் தனது ஊருக்கு பிரேமாவுடன் வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரேமா கர்ப்பமான செய்தியை அறிந்த அவரது பெற்றோர், அவருக்கு வளைகாப்பு நடத்தி திருமண சீர்வரிசையும் வழங்கியுள்ளனர். இந்த சீர்வரிசையில் வந்த பொருட்கள் போதவில்லை என்று கூறிய கலியபெருமாள் மற்றும் அவரது தாய் சூரிய காந்தி (வயது 59), பிரேமாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
குழந்தை பிறந்த பின்னரும் இத்தகராறு தொடரவே, கடந்த ஜூலை மாதத்தில் தனது மாமனாரின் இல்லத்திற்கு கொண்டு சென்று பிரேமாவை விட்டுவிட்டு, குழந்தையை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இதன்பின்னர், பிரேமாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து கலியபெருமாள் சமாதானம் பேசியுள்ளான்.
தனது மனைவியை தாதாம்பாளயத்திற்கு அழைத்து வந்த நிலையில், கணவன் – மனைவி தகராறில் கொடூரன் காதல் மனைவியை அடித்தே கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு கலியபெருமாளின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்துள்ளனர்.
முதலில் காதல், பின்னாளில் வரதட்சணை கொடுமை என்று கொடூர கொலை அரங்கேறியுள்ளது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், இறுதிவரை நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே பரிசாக பெறுகின்றனர்.
இதுபோன்ற கயவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது. இதுவே நாடக காதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற பல நாடகக்காதல்களை பெண்கள் நம்பி தனது வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள்.