தமிழகம்

உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கொரனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் ஐநா பெருமன்றம் மற்றும் உலக நாடுகளால் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் உணவுக்கு வழியின்றி கஷ்டப்பட்டு வரும் ஏழைகளுக்கு உதவும் பொருட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ALSO READ  புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அளித்த சலுகை..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்..!

அதன்படி கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலை இழந்து தவித்து வரும் ஏழைகளுக்கும் தாமிரபரணி நதிக் கரையோரம் கூடாரம் அமைத்து வசித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை தயார் செய்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று உணவுப் பொருட்களை வழங்கினர்.

ALSO READ  அரசு கையில் இருக்கும் தடுப்பூசிகளை செலுத்தாமல் மேலும் தடுப்பூசி கேட்கிறது; பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு ! 

மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களும் அவர்களுடைய குழந்தைகளுக்கு தேவையான உடை உள்ளிட்டவைகளும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விதி மீறல் – தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு; சென்னையில் மட்டும் 758 வழக்குகள்!

naveen santhakumar

பாஜக உறுப்பினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு !

News Editor

நவம்பர் 1-ல் வரைவு வாக்காளர் பட்டியல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

naveen santhakumar