கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு 1 வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
அதனையடுத்து இந்த ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா வருகிறது.
அதனையடுத்து தமிழத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
பொது மக்கள் நலன் கருதி, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.