தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகராக இருந்த சண்முகம் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
நேற்று வரை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் இவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரின் கடித்தது ஏற்று அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.