டிக்டாக் செயலி மற்ற அனைத்து செயல்களையும் பின்னுக்குத்தள்ளி உலக அளவில் மற்ற வைரஸ் நோய்களை விடவும் வேகமாக பரவி வருகிறது.
2020 ஜனவரி மாதம் வரையில் உலக அளவில் 105 மில்லியன் தடவைகள் இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்தியவிலிருந்து மட்டும் 35 சதவீத தரவிறக்கம் நடைபெற்றுள்ளது.
உலக அளவில் பலர் இந்த டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளனர்.
இந்தியாவில் இந்த டிக்டாக் செயலியில் பல பெண்கள் குத்தாட்டம் போடுவதால் பல வீடுகளே ஆடிபோய் உள்ளது.
இந்நிலையில் இந்த டிக் டாக் பயனாளிகள் இந்த செயலுக்கு அடிமையாவதை தவிர்க்க 3 புதிய வசதிகளை டிக் டாக் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Screen Time Management
இதன் மூலமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அதிக நேரம் டிக்டாக் செயலியில் செலவிடுவிலிருந்து தடுக்க முடியும்.
Direct Message
பெற்றோர்களே நேரடியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தமது பிள்ளைகளின் டிக்டாக் செயலி கட்டுப்படுத்த முடியும்.
Restricted Mode
இந்த வசதி மூலமாக டிக்டாக் பயணர்கள் ஒவ்வாது எனக் கருதும் வீடியோக்களை தடை செய்ய முடியும்.