உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கியது.
சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரை பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 90 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எனினும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியே 56 லட்சமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.