அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
இந்தத் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.
அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் இதுகுறித்து தனது கடைசி உரையில் பேசி உள்ளார். அதில், “பொறுமை தான் அனைத்தும் என தெரிவித்துள்ள மெலனியா, வன்முறை எதற்கும் பதில் அல்ல என்றும் அதனை நியாயப்படுத்த முடியாது’ என்று கூறினார்.