பெய்ஜிங்:-
சீனா பரப்பிய கொரோனாவில் இருந்து இன்னும் உலகம் விடுபடாத நிலையில், இப்போது, உலகின் முதல்முதலாக சீனாவில் இருவருக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் உலகில் பீதிய கிளப்பியுள்ளது.
சீனாவின் கிழக்கு ஜியாங்சு (Zhenjiang) மாகாணத்தில் ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அந்நட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. H10N3 பறவைக் காய்ச்சல் மனிதருக்கு ஏற்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
சீன சுகாதார அதிகாரிகள் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து அஞ்ச வேண்டியதில்லை என்றும், இந்த தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், இது பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிகக் குறைவு என்றும் கூறினார்.
பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ள நோயாளிக்கு மே 28 ம் தேதி H10N3 பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் தேசிய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில், அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை விவரிக்கவில்லை.
எச்10என்3 ( H10N3) மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக, இதற்கு முன்னர் உலகளவில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.