பீஜிங் :
இந்தியாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் மேற்கு மண்டல படைப் பிரிவின் கமாண்டராக ஜாங் சுடோங்கை சீன அதிபர் ஜிங் பிங் நியமித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3488 km நீள எல்லை உள்ளது. சீன ராணுவம் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவதும் அவர்களை இந்திய ராணுவம் விரட்டுவதும் அடிக்கடி நடக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக உள்ளது.கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில் 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.இந்திய ராணுவத்தின் பதிலடியில் 43-க்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அதிலிருந்து லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றத்தைக் குறைக்க இரு தரப்பிலும் ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுடனான எல்லையில் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவத்தின் மேற்கு மண்டல படைப் பிரிவின் கமாண்டராக ஜாங் சுடோங்கை சீன அதிபர் ஜிங் பிங் நியமித்துள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.