ரியாத் (Riyadh):-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மெக்காவிற்கு ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்றும் சவுதி அரேபியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
நவீன சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக வெளியில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு 2.5 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்ஃப் நாடுகளில் சவுதி அரேபியாவில் இதுவரையில் 1,60,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.