யோக்யகர்ட்டா:-
இந்தோனேசியாவின் கலாச்சார தலைநகர் யோக்யகர்ட்டாவில் உள்ள மவுண்ட் மெரபி (Mount Merapi) எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. எனவே சோலோ சிட்டில் (சுமத்ரா) விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூறிய இந்தோனேசிய ஊடகங்கள்:-
ஜாவா மற்றும் யோக்யகர்ட்டா மாகாணத்திற்கு இடையே அமைந்துள்ள மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியேறும் புகை வானில் மூட்டங்களுடன் 10கிமீ-கு சூழ்ந்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் (Red Alert) விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.
எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மெரபி பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டரை சுற்றியுள்ள பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.
இந்தோனேசியாவில் செயல்பாட்டின் இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த 130 எரிமலைகளில் மவுண்ட் மெரபி எரிமலையும் ஒன்று.
2010 ஆம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் சுமார் 300 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2,80,000 மக்கள் வெளியேற்றபட்டனர் என்பது குறிப்பிட தக்கது.