வடகொரியாவில் வடக்கு மாகாணத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு வசதிகளுடன் கூடிய கனவு நகரத்தை திறந்துள்ளார்.வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலமானவர்.
இந்நிலையில் வட கொரியாவை வடக்கு மாகாணத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக இடத்தில் பல்வேறு வசதிகள் கொண்ட ஒரு நகரத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டம் தனது ஆட்சிக்காலத்தில் கனவுத் திட்டங்களில் ஒன்றாகவும் வைத்திருந்தார்.
அதன்படி நேற்றைய தினம் இந்த கனவு நகரத்தை கிங் ஜாங் உன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆனால் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக இத்திட்டம் காலதாமதமாகவே நிறைவேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகரத்திற்கு “சம்ஜியொன்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மருத்துவமனைகள் கலாச்சார மையங்கள் நட்சத்திர ஓட்டல்கள் சொகுசு விடுதிகள் என அனைத்து வசதிகளுடன் கிட்டத்தட்ட 4000 குடும்பங்கள் வசிக்கலாம். நவீன நாகரீகத்தின் அடையாளமாகத் திகழும் இந்த கனவு நகரம் குறித்து அந்நாட்டு அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.