உலகம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல் :

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுக்க தொடங்கினர்.பெண்கள் காபூல் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

The Taliban explained | Conflict News | Al Jazeera

4 பெண்கள் காபூல் தெருக்களில் தலீபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.ஈரானிய ஊடகவியலாளர் மசிஹ் அலினேஜாட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காபூலில் உள்ள ஒரு தெருவில் நான்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் கையால் எழுதப்பட்ட காகித அட்டைகளை காட்டி, தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

ALSO READ  யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்- தேசிய கொடியை ஏற்றிய ஆப்கானியர்கள்

அவர்கள், சமூகப் பாதுகாப்பு, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை, அரசியல் பங்கேற்பு உரிமை உள்ளிட்ட உரிமைகளை கோருகின்றனர். எங்களது அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடாது’ என்று கூறுகின்றனர்.ஜலாலாபாத்தில் தலிபான்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆப்கானிஸ்தானின் கொடியை ஏந்திய இரண்டு எதிர்ப்பாளர்களை தலீபான்கள் சுட்டு கொன்றனர் மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் வென்ற எலிசபெத் ஹெலன்

Admin

துபாயில் நடக்கும் இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக மலாலா பங்கேற்பு :

naveen santhakumar

Watch : சிறுவர் பூங்காக்களில் கார் ஒட்டி விளையாடும் தலிபான்கள்…!

naveen santhakumar