உலகம்

லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற.. சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை.. காதல் வலையில் வீழ்த்தி..வங்கதேசத்தில் விற்றனர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

லண்டனில் மேற்படிப்புக்கு சென்ற சென்னை மாணவியை சர்வதேச கடத்தல் கும்பல் காதல் வலையில் வீழத்தி கடத்தியுள்ளது. இது குறித்து வங்கதேச முன்னாள் எம்பி மகன் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. 

இதில், இந்திய மதபோதகருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. வடசென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பெற்றோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் குடியேறினர். இவருடைய தந்தை பல்வேறு தொழில்கள் செய்து வசதியாக வாழ்கின்றனர்.

இந்நிலையில்,அந்த இளம்பெண் பெற்றோரிடம் அடம் பிடித்து லண்டனில் உள்ள பிரபல பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க சென்றார்.அங்கு சென்று சில மாதங்கள் வரை பெற்றோருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். பின்னர், திடீரென அவருடன் தொடர்பு கிடைக்கவில்லை. 

சென்னையில் இருந்து பெற்றோர் பல வகையில்,முயற்சி செய்தும் மகளுடன் பேசமுடியவில்லை.சந்தேகமடைந்த அவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தனர். இது பற்றி விசாரணை நடத்தும்படி என்ஐஏ.வுக்கு உத்தரவிடப்பட்டது. அதில், அப்பெண்ணை காதல்வலையில் வீழத்தி சர்வதேச கடத்தல் கும்பல்,லண்டனிலிருந்து வங்கதேசத்துக்கு கடத்தி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. 

ALSO READ  கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியது- நியூசிலாந்து அறிவிப்பு..

தற்போது அந்த பெண் வங்கதேச முன்னாள் எம்பி ஒருவரின் மகனான நபீஸ் என்பவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் அவரை கடத்திய கும்பல், நபீஸ்க்கு விற்றுள்ளது என்றும் தெரிய வந்தது. இந்தியாவைச் சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்குடன் நபீசுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த மே 28ம் தேதி என்ஐஏ இந்த வழக்கை சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி என்ஐஏவை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அவர்கள், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

ALSO READ  கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி......

இதையடுத்து, சர்வதேச இளம்பெண்கள் கடத்தல் கும்பலுடன் நபீசுக்க உள்ள தொடர்பு குறித்தும், அவனது கூட்டாளிகள் குறித்தும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.மத போதகர் ஜாகிர் நாயக் ஏற்கனவே பல வழக்குகளில் என்ஐஏவால் தேடப்பட்டு வருபவர்.

மேலும் அப்பெண்ணை கடத்திய சர்வதேச கும்பல், அவரை தங்களுடைய மதத்திற்கும் மாற்றி உள்ளனர். மாணவியை விடுவிக்ககோரி பெற்றோர் அணுகிய போது, அவரை விடுவிக்க பல கோடி ரூபாய் பணத்தை பிணையத் தொகையாகவும், கேட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

12-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை காணொளி மூலம் பங்கேற்பு :

naveen santhakumar

இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்கள் இணைந்து இலங்கையில் பயிற்சி

News Editor

வாரன் பஃபெட் -ஐ பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி! 

naveen santhakumar