ஜம்மு காஷ்மீர்:-
இந்தியாவைச் சேர்ந்த மூன்று புகைப்பட நிருபர்களுக்கு 2020ம் ஆண்டுக்கான தனிச்சிறப்பான புகைப்படம் (Feature Photography) என்ற பிரிவின் கீழ் புலிட்சர் பரிசை வென்றுள்ளார்.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புகைப்பட கலைஞர்கள் காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கியபின் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்த எடுத்த இவர்களது படங்கள் புலிட்சர் விருதை வென்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டது அதன் பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு நிகழ்ந்தவற்றை சன்னி ஆனந்த் (Channi Anand), தார் யாசின் (Dar Yasin) மற்றும் முக்தர் கான் (Mukhtar Khan) ஆகிய மூன்று பேரும் Associated Press News Agency (AP)-க்காக எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது புலிட்சர் விருதை வென்றுள்ளது.
சன்னி ஆனந்த் எடுத்த புகைப்படங்கள்
தார் யாசின் எடுத்த புகைப்படங்கள்
முக்கர் கான் எடுத்த புகைப்படங்கள்