விமானத்தின் மீது விழுந்த மின்னல் கீற்று: அதிர்ச்சியடைந்த பயணிகள்
நியூசிலாந்து நாட்டில் விமானம் ஒன்றின் மீது மின்னல் விழுந்த வீடியோப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூஸிலாந்தின் நாட்டின் கேண்டர்பரி பகுதியில் சில நாட்களுக்கு முன் இடி மின்னலுடன் கூடிய பெரும் மழை பெய்தது. அப்போது கிறிஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான A380 ஏர்பஸ் விமானம் ஒன்று தரையிறங்கிய போது அதன் மீது மின்னல் தாக்கியது.
இதனால் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக விமானத்தில் இருந்தவர்களை கீழே இறக்க முயற்சி செய்தார்கள். ஆனால் மிகவும் மோசமான வானிலை காரணமாக அது தாமதமாகி கொண்டே போனது. அந்த சமயம் அடுத்தடுத்து மின்னல்கள் தோன்றியதால் பயணிகளை விமானத்தின் உள்ளேயே காக்க வைத்ததாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றி 6 மணிநேரத்திற்குள் 1500க்கும் மேற்பட்ட மின்னல்கள் தாக்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.