லண்டன்:-
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’க்கு 300,000 பவுண்ட் அபராதம் விதித்தது பிரிட்டன்.
மும்பையைச் சேர்ந்தவரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகருமான ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு ஒழுங்கு முறை அமைப்பான ‘OFCOM (ஆஃப்காம்)’, 3 லட்சம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளது.
பீஸ் டிவி நிறுவனம் பிரிட்டனில் வெறுப்புணர்வைத் (Hate Speech) தூண்டும் நிகழ்ச்சிகளையும் மக்கள் மனதை புண்படுத்தும் நிகழ்ச்சிகளையும் (Highly Offensive) ஒளிபரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாம் வகுத்துள்ள ஒளிபரப்பு விதிகளை மீறியதாக பீஸ் டிவி (உருது) ஒளிபரப்பு நிறுவனத்துக்கு 2 லட்சம் பவுண்ட் மற்றும் பீஸ் டிவி நிறுவனத்துக்கு ஒரு லட்சம் பவுண்ட் அபராதம் (ரூ.2 கோடியே 75 லட்சத்து 51,773) விதித்துள்ளது. மேலும் பீஸ் டிவி நிகழ்ச்சிகளால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆஃப்காம் அமைப்பு கூறியுள்ளது.
Peace TV (உருது) லைசன்ஸ் உரிமையை கிளப் டிவி (Club TV) வைத்துள்ளது. மொத்தமாக பீஸ் டிவியின் உரிமை லார்டு புரோடக்சன் லிமிட்டட் (Lord Production Ltd) வைத்துள்ளது.
ஆங்கிலம், வங்காளம், உருது மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் Peace TV (அமைதி தொலைக்காட்சி) துபாயில் இருந்து ஒளிபரப்பாகிவருகிறது. இதன் நிறுவனர் மற்றும் தலைவராக ஜாகிர் நாயக். தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஜாகிர் நாயக்கை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.