வாஷிங்டன்:-
எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவின் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு எதிரான விமர்சனங்களை டிரம்ப் காட்டமாக முன்வைத்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது வேறு எந்த சர்வாதிகாரக் கட்சியுடனும், உள்நாட்டு அல்லது வெளிநாட்டினருடன் உறுப்பினராக அல்லது இணைந்திருக்கும் எந்தவொரு நபரும் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் வேலைவாய்ப்பு, உணவுப் பொருட்கள் அல்லது பிற வாழ்க்கை அத்தியாவசியங்களுக்காக கட்சியில் சேரும்படி கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டம் 1952 முதல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை விலக்குவது அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், புதிய வழிகாட்டுதல் இந்த விலக்கின் கொள்கை அமலாக்கத்தை புதுப்பிக்கிறது.