இன்று ஜுன் 18 உலகம் முழுவதும் நிலையான சிறப்பாக உண்ணும் கலை தினமாக கொண்டாடப்படுகிறது.
2016-ம் ஆண்டு டிசம்பர் 21 அன்று A/RES/71/246 தீர்மானம் மூலமாக ஜூன் 18 ஆம் தேதியை உலக நிலையான சிறப்பாக உண்ணும் கலை தினமாக ஐநா சபை அறிவித்தது. இது வருடம் தோறும் ஜூன் 18-ம் தேதி உலக நிலையான சிறப்பான உண்ணும் கலை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சிறப்பாக உண்ணும் கலை என்பதனை உலகின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இயற்கையுடன் தொடர்புடைய கலாசாரத்தின் வெளிப்பாடாக உருவகப்படுத்தும் விதமாக ஐநா சபை இந்த தினத்தை ஏற்படுத்தியது. சிறப்பாக உண்ணும் கலை என்பது அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் நாகரீகங்களின் நிலையான முன்னேற்றத்திற்கான முக்கிய பங்குதாரர்கள் மற்றும் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆகும்.
நிலையான சிறப்பாக உண்ணும் கலை விவசாய முன்னேற்றம், உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, நிலையான உணவு உற்பத்தி, ஊட்டச்சத்து ஆகியவற்றில் நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்று புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தியாகும் அல்லது தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு உணவு சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதனை உற்பத்தி செய்பவர்கள் மற்ற பகுதியில் உள்ளவர்களோடு எளிதில் தொடர்பு கொள்ளவும், தங்களது உற்பத்தியை பெருமளவில் வெளியில் சந்தைப்படுத்தவும் உதவுகிறது.
யுனெஸ்கோ, உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), ஐநா பொதுச் சபை ஆகியவை வருடம்தோறும் இந்த நிலையான சமைக்கும் கலை தினத்தை அனுசரித்து வருகிறது. இதன் மூலமாக உலகின் கவனத்தை ஈர்க்கிறது.