தென் ஆஃப்பிரிக்கா:-
உலகின் மிகவும் பழமையான மரம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆஃப்பிரிக்காவின் சிடர்பெர்க் மலைப்பகுதியில் கிளான்வில்லியம் சிடார் என்ற மரம் உள்ளது. சுமார் 225 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இந்த மரம்தான் உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரத்தை கடந்த 17 ஆண்டுகளாக ரிகா டூ ப்ளஸிஸ் ( Rika Du Plessis) பாதுகாத்து வருகிறார்.
இந்த மரம் குறித்து ரிகா கூறுகையில்:-
உறைபனிக்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மரத்தின் பின் இதே வகை மரங்கள் சுமார் 13 ஆயிரத்து 500 வகை மரங்கள் தற்போது இருப்பதாகவும், அவைகளும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், காலநிலை மாற்றம், அதிக வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணிகளால் இந்த மரத்தின் விதைகள் பலமிழந்து காணப்படுகிறு. இதனால் இந்த மரம் மேலும் பரவும் முறை தடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மரத்தில் சிறு தீப்பொறி பட்டாலும் இதை காப்பாற்ற முடியது என்று தெரிவித்தார்.