ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… முன்னேற்றத்தில் அடியெடுத்து வைக்கும் விருச்சிக ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராசி நாதனான செவ்வாயும்விருச்சிகத்திற்கு யோகாதிபதியான குருவும் இருவரும் இணைந்து இரண்டாம் இடத்தில் இருப்பது விருச்சிகத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். கடந்த காலங்களில் நடந்த ஏழரை சனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது என்பதை நீங்கள் ஏற்கனவே உணரத் தொடங்கி விட்டீர்கள். கடந்த ஏழரை வருடமாக நீங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. உங்களது துயரங்களை யாரிடமும் வாய்விட்டு சொல்ல முடியாத அளவுக்கு உங்களுடைய நிலைமை மோசமாக இருந்தது. கலங்கவேண்டாம் அத்தனையும் முடிவடைந்தது. சுட்டெரிக்கும் பாலைவனத்தில் உங்களுடைய பயணங்களை மேற்கொண்டு இருந்தீர்கள்.

இந்த நிலை இனி தொடராது. அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கும் விருச்சிகத்துக்கு சம்பந்தம் உண்டா என்று கடந்த காலத்தில் என்னிடம் நிறைய விருச்சிக ராசியினர் கேட்டுள்ளனர். ஆமாம் இதோ அந்த காலம் வந்துவிட்டது உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆரம்பிக்கும் மாதம் இது. விருச்சிகத்தின் முன்னேற்றங்கள் ஆரம்பித்துவிட்டன. இனி உங்களை நீங்களே உணர முடியும். குழப்பங்கள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது.

ராசிக்கு யோகாதிபதியான குரு வலுப்பெற்ற நிலையில் இரண்டாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை பார்ப்பது தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் தொழில் மூலம் நன்மைகள் நடக்க தொடங்கும். இதுவரை குலதெய்வ வழிபாட்டில் குறைகள் இருந்தால் அதை செய்து முடிப்பீர்கள். மூன்றாம் இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ள சனி நண்பர்கள் மூலமாகவும் இளைய சகோதர சகோதரிகள் மூலமாகவும் சிறு சிறு விரயங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். தந்தையுடைய உடல்நிலையிலும் அக்கறை தேவை. ஏழாமிட அதிபதியான சுக்கிரன் ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்று இருப்பது கணவன் மனைவி இடையே நல்ல உறவு நிலையைக் குறிக்கின்றது. இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். இருவருக்குள்ளும் சுமூகமான சூழ்நிலை ஏற்படும்.

ALSO READ  சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

பன்னிரெண்டாம் இடத்தின் அதிபதி ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்றிருப்பது குழந்தைகள் மூலமாக விரயங்கள் ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் அந்த விஷயங்கள் அனைத்துமே சுப செலவுகளாக தான் இருக்கும். கவலை வேண்டாம். மாணவர்களும் கல்வி நிலையில் நல்ல மேம்பட்ட நிலையில் காணப்படுவர். தொழிலில் இருந்த தடைகள் அத்தனையும் நீங்கி முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். பெண்கள் மூலம் அதிக ஆதாயம் பெறுவீர். சந்திராஷ்டம நாட்கள் அன்று அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பயணங்களில் அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: 3-ம் தேதிஇரவு11.03முதல் 6-ம் தேதி அதிகாலை 5:00 amவரை.

ALSO READ  அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்...!!

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்.

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெறுவார்…!

News Editor

10 வருடத்துக்கு ஒரு ஹிட் கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் எனக்கு முக்கியமல்- பாலகிருஷ்ணா சர்ச்சை

naveen santhakumar

யானையை அடிச்சு தூக்கும் எருமைகன்று.. கெத்து காட்டிய வீடியோ..

naveen santhakumar