மும்பை:-
மஹாராஷ்ட்ரா ஆளுநரின் கோரிக்கையைத் தொடர்ந்து சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால், மகாராஷ்டிர முதல்வர் பதவியை இழக்கும் நிலையில் இருந்த உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியுள்ளது.
மகாராஷ்டிர சட்டமேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு தோ்தல் நடத்துமாறு மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, வியாழக்கிழமை கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்ட மேலவைத் தேர்தலை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி பதவியேற்றாா்.
எனினும், அவா் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாததால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவையின் உறுப்பினராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாா். அவருக்கான 6 மாத காலஅவகாசம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சட்டப்பேரவை அல்லது மேலவையின் உறுப்பினராகவில்லை என்றால், அவா் முதல்வா் பதவியை இழக்க நேரிடும்.