இந்தியா

கொரோனா வைரஸ் பரவல் வீரியம் குறைந்தது- எய்ம்ஸ் இயக்குனர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

உலகின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் தற்போது இந்தியாவில் குறைந்துள்ளது மேலும், 90% கொரோனா நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகிறது என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துஉள்ளார்.

இது ரந்தீப் குலேரியா அவர் மேலும் கூறியதாவது:-

தீவிர கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததில், நோய் பரவலின் வீரியம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 80 சதவீதம் பேர், 12 – 13 நகரங்களில் வசிக்கின்றனர்.

இப்பகுதிகளில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டால், அடுத்த 2 – 3 வாரங்களில், நோய் உச்சத்தை தொட்டு, பின் சரியத் துவங்கி விடும்.

ALSO READ  விபத்தில் சிக்குவதற்கு முன் இரு முறை முயற்சி செய்த ஏர் இந்தியா விமானம்… 

மேலும், கூறிய குலேரியா இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு, பி.சி.ஜி. எனப்படும், காசநோய் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதால், இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையவர்களாக உள்ளனர். இதுவும் கொரோனா பலி குறைவாக உள்ளதற்கு ஒரு காரணம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் குறைவாகவே உள்ளனர். அதோடு வென்டிலேட்டர் கருவியின் உதவியோடு சிகிக்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

ALSO READ  விமான போக்குவரத்து தொடங்குவது எப்போது.?? மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்....

ஹைட்ராக்ஸிக்கிலோராக்வின் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துகள் பற்றி கூறும் போது:-

‘ரெம்டிசிவிர்’ மருந்து, நோய் குணமாகும் காலத்தை குறைக்குமே தவிர, தீவிர நோய் உள்ளவர்களின் மரணத்தை தடுக்க துணை புரியாது. அதுபோல, லேசான அறிகுறி உள்ளோருக்கு, ‘ஹைட்ராக்சிகுளோரோக்வின்’ மருந்து ஓரளவு பலனளிக்கிறது. இந்தியாவில், கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. அதேவேளையில், ‘கொரோனா ஹாட்ஸ்பாட்’ பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என் பந்தை காணல…காவல் நிலையத்தில் புகாரளித்த சிறுவன்…

Admin

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி…… திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள்:

naveen santhakumar

இந்திய சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட்டுள்ள குறும்படம்…

naveen santhakumar