இந்தியா

ம.பி.-பசு பாதுகாப்பு கும்பலின் மாவட்டத் தலைவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் (Hoshangabad)-ல் பசு பாதுகாவலர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கொடிய ஆயுதங்களால் தாக்கி, துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் பசு பாதுகாப்பு பிரிவின் (Gau Raksha) மாவட்ட தலைவராக இருப்பவர் ரவி விஸ்வகர்மா (35). இவர் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிபாரியா நகருக்கு (Pipariya) தனது நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஒரு கும்பல் கூர்மையான ஆயுதங்களால் அவர்களின் காரை சூழ்ந்து கொண்டு தாக்கியது. 

ALSO READ  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா! அடுத்த முதல்வர் யார்?

காரினுள் இருந்த ரபி விஸ்வகர்மாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது நெஞ்சில் குண்டு பாய்ந்தது. அவரை வெளியே இழுத்துப்போட்டு உயிர் பிரியும் வரை தங்களிடமிருந்த ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். ரவி விஸ்வகர்மா உடன் காரில் வந்தவர்கள் நண்பர்கள் இருவரையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது. இந்த காட்சிகளை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து உள்ளார். இந்த காட்சிகள் தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எரிந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டரை புத்திசாலித்தனமாக செயல்பட்டு அணைத்த போலீஸ் கான்ஸ்டபிள்… 

naveen santhakumar

அடுத்த அதிர்ச்சி – வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு…!

naveen santhakumar

நாடாளுமன்ற இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு

News Editor